செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே ஒரே கிராமத்தில் 10-க்கும் மேற்பட்டோரை கடித்த வெறிநாய்கள்

Published On 2016-11-25 17:35 GMT   |   Update On 2016-11-25 17:35 GMT
ஜெயங்கொண்டம் அருகே ஒரே கிராமத்தில் 10-க்கும் மேற்பட்டோரை வெறிநாய்கள் கடித்ததால் கிராம மக்கள் அனைவரும் கையில் கம்புடன் அலைய வேண்டிய அவல நிலை உண்டாகியுள்ளது.
ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெருமாள் தீயனூர் கிராமத்தில் வெறிநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு அச்சப்படுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.

முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வெளியே வரவே அச்சப்படுகின்றனர். இந்த கிராமங்களில் இதுவரை 10-க்கும் மேற்பட்டவர்கள் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை  புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாய்களை இந்த பகுதியில் அப்புறப்படுத்தினால் மட்டுமே நிரந்தரமான தீர்வு காணமுடியும்.

கிராம மக்கள் அனைவரும் கையில் கம்புடன் அலைய வேண்டிய அவல நிலை உண்டாகியுள்ளது. பொதுமக்களின அச்சத்தை போக்குவதற்கு அதிகாரிகள் விரைந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News