செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே தாய் இறந்த துக்கத்தில் மகள் தற்கொலை

Published On 2016-11-21 18:22 IST   |   Update On 2016-11-21 18:22:00 IST
ஜெயங்கொண்டம் அருகே தாய் இறந்த துக்கம் தாங்காமல் விஷ மருந்தை குடித்து மகள் தற்கொலை செய்து கொண்டார்.

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகே பொய்யாதநல்லூர் நடுத்தெருவைச் சேர்ந்த சுந்தரம் மகன் ராஜேந்திரன் (55). இவருக்கு ஒருமகன், ஒரு மகள். மகள் சந்தியாவை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தவாடி கிராமம் தங்கவேல் மகன் அண்ணாதுரை என்பவருக்கு இரண்டாம்தாரமாக திருமணம் செய்து கொடுத்தனர்.

ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 5 மாதங்களுக்கு முன் சந்தியாவின் தாய் சங்கீதா வாகன விபத்தில் இறந்து விட்டதால், அம்மா இறந்துபோனதில் மன உளைச்சலில் இருந்தவர் அம்மாவே இறந்தபிறகு நாம் ஏன் உயிரோடு இருக்கணும் என்று நேற்று முன் தினம் இரவு தனது வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார்.

தகவல் அறிந்த ராஜேந்திரன் மற்றும் உறவினர்கள் சந்தியாவை அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து விட்டதாக ராஜேந்திரன் இரும்புலிக் குறிச்சி போலீசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி இனிகோ திவ்யன் விசாரணை செய்து வருகிறார்.

Similar News