செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே காது குத்து நிகழ்ச்சியில் இரு தரப்பினர் மோதல்

Published On 2016-11-20 22:20 IST   |   Update On 2016-11-20 22:20:00 IST
ஜெயங்கொண்டம் அருகே காது குத்து நிகழ்ச்சியில் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இந்த சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகிறார்கள்.

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பரணம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சத்யராஜ் (வயது 28). இவர் கடந்த 13-ம் தேதி தனது உறவினரான சின்னப்பன் குழந்தைகளுக்கு அருகில் உள்ள வீராக்கன் வீராயி கோயிலில் நடைபெற்ற காதுகுத்தி, கிடா வெட்டி விருந்து வைத்திருந்ததால் அன்று இரவு 8 மணியளவில் சென்று சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அங்கு வந்த பரணம் அதே தெருவைச் சேர்ந்த சின்னதுரை மகன் பாக்யராஜ் (27) என்பவர் சாதியின் பெயரை சொல்லி அசிங்கமாக திட்டியுள்ளார்.

இதுகுறித்து சத்யராஜ் கேட்டதற்கு அருகில் இருந்த குத்து விளக்கை எடுத்து குத்தியதில் சத்தியராஜ் பலத்த காயமடைந்தார். தடுக்க வந்த வடக்கு பரணத்தைச் சேர்ந்த கங்கா, பன்னீர் ஆகிய இருவரையும் பாக்யராஜ் தம்பி சிலம்பரசன் (24), ஜெயராமன் மகன் சதீஷ் (17), செல்வம் மகன் சுரா (எ) கலைச்செல்வன் (20) ஆகியோர் அருகில் கிடந்த செங்கற்களால் கங்கா, பன்னீர் ஆகியோரை தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து சத்யராஜ் இரும்புலிக்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்கு பதிந்து பாக்யராஜ், சதீஷ், சுரா ஆகிய மூவரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய சிலம்பரசனை தேடி வருகின்றனர்.

Similar News