செய்திகள்
திருமானூர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
திருமானூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள இலந்தைக்கூடம் கிராமம் நல்லேந்திரசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 48). இவர், சென்னையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
கடந்த 14–ந்தேதி அவர் தனது சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் நேற்று காலை அவரது உறவினர் வீட்டு மாட்டு கொட்டகையில் ராஜலிங்கம் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜலிங்கம் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள இலந்தைக்கூடம் கிராமம் நல்லேந்திரசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 48). இவர், சென்னையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
கடந்த 14–ந்தேதி அவர் தனது சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் நேற்று காலை அவரது உறவினர் வீட்டு மாட்டு கொட்டகையில் ராஜலிங்கம் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜலிங்கம் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.