செய்திகள்

ரூபாய் நோட்டு பிரச்சனை: புதுக்கோட்டை சந்தை வெறிச்சோடியது

Published On 2016-11-19 21:29 IST   |   Update On 2016-11-19 21:29:00 IST
புதுக்கோட்டை சந்தையில் ரூ.500, ரூ.1000 பிரச்சனையாலும், சில்லரை தட்டுப்பாடாலும் கிராம மக்கள் சந்தையைப் புறக்கணித்தனர். வியாபாரிகள் நஷ்டமடைந்ததால் தங்களது வேதனையைத் தெரிவித்துக் கொண்டனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை கூடுகிறது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சந்தைக்கு வந்து 1 வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் செல்வர்.

இந்நிலையில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததாலும், அதனால் ஏற்பட்ட சில்லரைத் தட்டுப்பாட்டாலும் கிராம மக்கள் சந்தைக்கு வருவதை புறக்கணித்தனர். காய்கறிகள் வாங்கத் தேவையான பணம் இல்லாத காரணத்தால் சந்தைக்கு வரும் மக்கள் கூட்டம் மிகவும் குறைந்து காணப்பட்டது.

காய்கறிகள் கொள்முதல் செய்து வந்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பெரிதும் நஷ்டம் அடைந்தனர். இதனால் அவர்கள் தங்களது வேதனையைத் தெரிவித்துக் கொண்டனர். அதேபோல ரூ.1000 நோட்டோடு சந்தைக்கு வந்தவர்கள் சில்லரை கிடைக் காததால் பொருட்கள் வாங்க முடியாமல் பரிதாப நிலையை அடைந்தனர்.

Similar News