புதுக்கோட்டையில் அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்
புதுக்கோட்டை:
அகவிலைப்படியை உடனே வழங்கிடவும், 20 சதவிகிதம் இடைக்கால நிவாரணம், 9 மாதகால மகப்பேறு விடுப்பு, நிர்வாகத் தீர்ப்பாயம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் புதுக்கோட்டை பொதுஅலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கி.ஜெயபாலன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரவிச்சந்திரன், ரெங்கசாமி, சத்தி, பழனிச்சாமி, பக்கீர்முகம்மது, இன்னாசி முத்து, குமரேசன், மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தசாமி பேசினர்.
வருவாய்த்துறை ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.நாகராஜன் மற்றும் சங்க நிர்வாகிகள் எஸ்.ராமச்சந்திரன், வி.ஜெகன்நாதன், எஸ். அண்ணாத்துரை, கே.கருப்பையா, எம்.ராமநாதன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். மாவட்ட பொருளாளர் கே.நாகராஜன் நன்றி கூறினார்.