செய்திகள்

மதகுபட்டி அருகே இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை

Published On 2016-11-17 17:14 IST   |   Update On 2016-11-17 17:14:00 IST
மதகுபட்டி அருகே வெளியில் சென்ற இளம்பெண் வீடு திரும்பாமல் மாயமாகி விட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை:

மதகுபட்டி அருகே உள்ள காடனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வதி (வயது47). இவரது மகள் தனபாக்கியம் (வயது24). இவர், கணவர் முத்துக்குமாருடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அவர், மதகுபட்டி வரை சென்று வருவதாக உறவினர்களிடம் கூறி சென்றார். அதன் பிறகு மாலையில் அவர் வீடு திரும்பவில்லை.

உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களிலும் தனபாக்கியத்தை தேடியும் பலன் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து மதகுபட்டி போலீசில் பார்வதி புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து மாயமான தனபாக்கியத்தை தேடி வருகிறார்.

Similar News