செய்திகள்
சிவகங்கையில் தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை - பணம் கொள்ளை
3 வீடுகளில் மர்ம மனிதர்கள் கதவை உடைத்து கொள்ளை சம்பவம் நடத்தி உள்ளனர். தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் அருகே உள்ள அழகாபுரி எழில்நகரை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 45). இவர் புதுக்கோட்டை மாவட்டம் அரிமலம் அருகே உள்ள ஏத்தநாடு பகுதி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார்.
கார்த்திகை முதல் நாளான நேற்று, மதுரை மாவட்டம் அழகர்மலையில் உள்ள அழகர்கோவிலுக்கு குடும்பத்தினருடன் புகழேந்தி சென்றார். அங்கு சாமி தரிசனம் முடித்து விட்டு இரவு அவர் வீடு திரும்பினார்.
வீட்டுக்குள் நுழைந்த புகழேந்தி குடும்பத்தினர் அங்கு பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
அதன்வழியாக உள்ளே நுழைந்த மர்ம மனிதர்கள், வீட்டின் பீரோவை திறந்து நகை-பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இது குறித்து பள்ளத்தூர் போலீ சாருக்கு புகழேந்தி தகவல் கொடுத்தார். வீட்டில் இருந்த 18½ பவுன் நகைகள் 1 கிலோ வெள்ளி, ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் போன்றவை கொள்ளை போயிருப்பதாக புகாரில் அவர் தெரிவித்துள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ 5 லட்சம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் பட்டப்பகலில் நடந்துள்ள, அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பள்ளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெய பாண்டியன் மற்றும் போலீ சார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.
தடயவியல் நிபுணர்களும் கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.
திருப்பத்தூர் தாலுகா பிரான்மலை கீழத்தெருவை சேர்ந்தவர் நாகரத்தினம் (70). இவர் வீட்டை பூட்டி விட்டு கடைவீதிக்கு சென்ற நேரத்தில் பின்பக்க கதவை உடைத்து மர்ம மனிதர்கள் புகுந்துள்ளனர்.
அவர்கள் அங்கிருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ. 1,000 ரொக்கத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இவற்றின் மதிப்பு ரூ. 26 ஆயிரம் ஆகும். இது குறித்த புகாரின் பேரில் எஸ்.வி.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதகுபட்டி அருகே உள்ள பாகனேரி நடராஜ புரத்தை சேர்ந்தவர் வெங் கடாசலபதி (47). தற்போது காரைக்குடியில் வசிக்கும் இவர், நேற்று சாமி கும்பிடுவதற்காக நடராஜபுரம் வந்தார். அங்குள்ள பூர்வீக வீட்டிற்கு சென்ற அவர் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த 8 பவுன் வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருப்பதாக, கல்லல் போலீசில் வெங்கடாசலபதி புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று இருப்பது மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஈடுபட்டது ஒரே கும்பலா? தனித்தனி நபர்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் அருகே உள்ள அழகாபுரி எழில்நகரை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 45). இவர் புதுக்கோட்டை மாவட்டம் அரிமலம் அருகே உள்ள ஏத்தநாடு பகுதி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார்.
கார்த்திகை முதல் நாளான நேற்று, மதுரை மாவட்டம் அழகர்மலையில் உள்ள அழகர்கோவிலுக்கு குடும்பத்தினருடன் புகழேந்தி சென்றார். அங்கு சாமி தரிசனம் முடித்து விட்டு இரவு அவர் வீடு திரும்பினார்.
வீட்டுக்குள் நுழைந்த புகழேந்தி குடும்பத்தினர் அங்கு பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
அதன்வழியாக உள்ளே நுழைந்த மர்ம மனிதர்கள், வீட்டின் பீரோவை திறந்து நகை-பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இது குறித்து பள்ளத்தூர் போலீ சாருக்கு புகழேந்தி தகவல் கொடுத்தார். வீட்டில் இருந்த 18½ பவுன் நகைகள் 1 கிலோ வெள்ளி, ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் போன்றவை கொள்ளை போயிருப்பதாக புகாரில் அவர் தெரிவித்துள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ 5 லட்சம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் பட்டப்பகலில் நடந்துள்ள, அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பள்ளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெய பாண்டியன் மற்றும் போலீ சார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.
தடயவியல் நிபுணர்களும் கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.
திருப்பத்தூர் தாலுகா பிரான்மலை கீழத்தெருவை சேர்ந்தவர் நாகரத்தினம் (70). இவர் வீட்டை பூட்டி விட்டு கடைவீதிக்கு சென்ற நேரத்தில் பின்பக்க கதவை உடைத்து மர்ம மனிதர்கள் புகுந்துள்ளனர்.
அவர்கள் அங்கிருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ. 1,000 ரொக்கத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இவற்றின் மதிப்பு ரூ. 26 ஆயிரம் ஆகும். இது குறித்த புகாரின் பேரில் எஸ்.வி.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதகுபட்டி அருகே உள்ள பாகனேரி நடராஜ புரத்தை சேர்ந்தவர் வெங் கடாசலபதி (47). தற்போது காரைக்குடியில் வசிக்கும் இவர், நேற்று சாமி கும்பிடுவதற்காக நடராஜபுரம் வந்தார். அங்குள்ள பூர்வீக வீட்டிற்கு சென்ற அவர் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த 8 பவுன் வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருப்பதாக, கல்லல் போலீசில் வெங்கடாசலபதி புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று இருப்பது மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஈடுபட்டது ஒரே கும்பலா? தனித்தனி நபர்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.