செய்திகள்

அரியலூரில் பாலிதீன் பொருட்களுக்கு தடை: கலெக்டர் அறிவிப்பு

Published On 2016-11-16 17:38 IST   |   Update On 2016-11-16 17:39:00 IST
அரியலூர் மாவட்டத்திலுள்ள வரலாற்று நினைவுச்சின்னம் மற்றும் சுற்றுலாத்தலங்கள் 300.மீ தூரத்திற்குள் பாலிதீன் பொருட்கள் பயன்படுத்த கூடாது என மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

அரியலூர்:

மத்திய அரசால் 02.10.2016 முதல் வரலாற்று நினைவுச் சின்னங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் 300.மீ தூரத்திற்குள் பாலிதீன் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, அரியலூர் மாவட்டத்திலுள்ள வரலாற்று நினைவுச்சின்னம் மற்றும் சுற்றுலாத்தலங்கள் 300.மீ தூரத்திற்குள் பாலிதீன் பொருட்கள் பயன்படுத்த கூடாது என மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News