செய்திகள்

டிரைவர் கவனிக்காமல் எடுத்ததால் லாரியின் அடிபகுதியில் படுத்து தூங்கியவர் பலி

Published On 2016-11-07 16:10 IST   |   Update On 2016-11-07 16:10:00 IST
பவானியில் லாரியின் அடிபகுதியில் படுத்து தூங்கியவரை, டிரைவர் கவனிக்காமல் லாரியை எடுத்ததால் பரிதாபமாக இறந்தார்.

பவானி:

பவானி பழனிபுரம் முதல் வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 42). கூலித் தொழிலாளியான இவர் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அங்கு நடந்த சூரசம்கார விழாவை பார்த்து விட்டு கூடுதுறை அருகே வந்தார்.

இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால் பழனிச்சாமி அங்கு ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் அடிப்பகுதியில் படுத்து தூங்கினார்.

இந்த நிலையில் அதிகாலையில் அந்த லாரியின் டிரைவர் சச்சிதானந்தம் அங்கு வந்தார். அவர் லாரியின் அடிபகுதியில் பழனிச்சாமி தூங்கி கொண்டிருப்பதை பார்க்கவில்லை.

லாரியை அவர் எடுத்தபோது அடிபகுதியில்  படுத்து தூங்கி கொண்டிருந்த பழனிச்சாமியின் தலை மீது லாரியின் சக்கரம் ஏறி நசுக்கியது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் பவானி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான பழனிச்சாமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதுகுறித்து பவானி போலீஸ் இன்ஸ் பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News