ரேசன் அரிசி கடத்திய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
ஈரோடு:
பவானி பகுதியில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு லாரிகளில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையொட்டிஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது பர்கூர் மலைப்பகுதியில் தட்டக்கரை அருகே வேகமாக வந்த 2 லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
அப்போது அந்த லாரியில் 30 டன் ரேசன் அரிசி இருப்பதும் இந்த அரிசி மூட்டைகள் கர்நாடகாவுக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்தது.
இதையொட்டி அந்தியூர் ஜி.எஸ் காலனியை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 37), பெருந்துறை கந்தாம் பாளையத்தை சேர்ந்த சத்யராஜ் (29) மற்றும் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் ஈஸ்வரன், சத்யராஜ் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.
இதை ஏற்று இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஈஸ்வரன், சத்யராஜ் ஆகிய 2 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் இருவரும் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அகமது அலியின் கூட்டாளிகள்.