செய்திகள்
கோபி அருகே வேன் மோதி பெயிண்டர் பலி: போலீசார் விசாரணை
கோபி அருகே வேன் மோதி பெயிண்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
கோபி, கொளப்பலூர் எல்.எம்.காலனியை சேர்ந்தவர் மோகன்(வயது47). பெயிண்டர். இவரது மனைவி பர்வதம்(வயது35).
சம்பவத்தன்று மோகன் வேலை விஷயமாக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கோபி-குன்னத்தூர் ரோடு அருகே சென்ற போது அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராத வகையில் மோகன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மோகன் தலையில் பலத்த அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடினார். அருகில் இருந்தவர்கள் கார் மூலம் மோகனை கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
மோகனை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்தனர். விபத்து நடந்ததும் வேன் டிரைவர் வேனை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கோபி, கொளப்பலூர் எல்.எம்.காலனியை சேர்ந்தவர் மோகன்(வயது47). பெயிண்டர். இவரது மனைவி பர்வதம்(வயது35).
சம்பவத்தன்று மோகன் வேலை விஷயமாக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கோபி-குன்னத்தூர் ரோடு அருகே சென்ற போது அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராத வகையில் மோகன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மோகன் தலையில் பலத்த அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடினார். அருகில் இருந்தவர்கள் கார் மூலம் மோகனை கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
மோகனை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்தனர். விபத்து நடந்ததும் வேன் டிரைவர் வேனை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.