செய்திகள்

வேதாரண்யம் அருகே கார் மோதி பெண் படுகாயம்

Published On 2016-11-05 15:09 IST   |   Update On 2016-11-05 15:09:00 IST
வேதாரண்யம் அருகே கார் மோதி பெண் படுகாயமடைந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசேகரன். இவரது மனைவி மேரி (எ) ஜெயமணி (வயது 34). இவர் சம்பவத்தன்று நாகை மெயின்ரோட்டில் நடந்து வந்த போது எதிரே வந்த கார் மோதி படுகாயமடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து ஜெயமணி கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News