செய்திகள்

சரக்கு வேன் மோதி பெண் பலி

Published On 2016-11-04 18:14 IST   |   Update On 2016-11-04 18:14:00 IST
கொடுமுடி அருகே சரக்கு வேன் மோதி பெண் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

ஈரோடு:

கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூர் ஈரோடு- கரூர் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவரது மகள் அமுதவள்ளி (வயது 56). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

அமுதவள்ளி அவர் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேன் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கொடுமுடி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவரை தேடி வருகிறார்கள்.

Similar News