செய்திகள்
ஈரோட்டில் இளம்பெண் திடீர் மாயம்
ஈரோடு அருகே இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மூலப்பாளையம் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது30). வேன் டிரைவர். இவரது மனைவி மீனாட்சி(வயது28).
இவர்களுக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆகியுள்ளது.குழந்தை இல்லை. மீனாட்சி இருமுறை கருவுற்று கருசிதைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் மனவேதனையுடன் இருந்துள்ளார். அவரை பிரகாஷ் ஆறுதல் கூறி சமாதானப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மீனாட்சி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். மாலையில் வேலையை முடித்து வீட்டுக்கு வந்த பிரகாஷ் மனைவி வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர் வீடுகள் முழுவதும் மனைவியை தேடினார்.
ஆனால் மீனாட்சி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து பிரகாஷ் ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.
தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மீனாட்சியை தேடி வருகிறார்கள்.