செய்திகள்

வேதாரண்யம் அருகே பஸ் நிற்காததை கண்டித்து சாலை மறியல்

Published On 2016-11-04 15:22 IST   |   Update On 2016-11-04 15:22:00 IST
வேதாரண்யம் அருகே பஸ் நிற்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம்-திருத்துறைப்பூண்டி வாய்மேடு மார்க்கத்தில் சாதாரண மற்றும் எக்ஸ்பிரஸ் பஸ்கள் சென்று வருகின்றன. இதில் ஆதனூர் பகுதியில் எக்ஸ்பிரஸ் பஸ்கள் நிற்பது கிடையாது.

சம்பவத்தன்று வேதாரண்யத்திலிருந்து திருச்சி சென்ற எக்ஸ்பிரஸ் பஸ் ஆதனூர் பகுதியில் நிற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த ரெங்கராஜன், நடராஜன், கோவில்தாவைச் சேர்ந்த சேகர், மாரிப்பிள்ளை ஆகியோர் முன்னறிவிப்பு இல்லாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் 45 நிமிடம் வேதாரண்யம்-திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து ஆதனூர் கிராம நிர்வாக அலுவலர் கனகராஜன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News