காரைக்குடியில் இளம்பெண்ணை காரில் கடத்திய வாலிபர் கைது
காரைக்குடி:
சிவகங்கை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது50). இவர் அந்த பகுதியில் இளநீர் கடை வைத்துள்ளார். இவரது மகள் ரேவதி (22). கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
ஏகாம்பரததின் இளநீர் கடைக்கு காரைக்குடி அண்ணாநகரை சேர்ந்த அழகர்சாமி மகன் சதீஷ் குமார் (26) என்பவர் இளநீர் காய்களை இறக்கி வந்தார். அப்போது ரேவதியை பார்த்த சதீஷ்குமார் அவரை திருமணம் செய்ய ஆசைப் பட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டு அருகே நடந்து சென்று கொண்டிருந்த ரேவதியை வாலிபர் சதீஷ் குமார் காரில் போட்டு கடத்தி சென்றார். இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காரைக்குடி தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து செயல்பட்டு அரியக்குடி சோதனைச்சாவடி அருகே காரை மடக்கி பிடித்தனர். அதில் இருந்த ரேவதி மீட்கப்பட்டார். அவரை கடத்திய வாலிபர் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.