செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை

Published On 2016-11-04 08:08 GMT   |   Update On 2016-11-04 08:08 GMT
ஈரோடு மாவட்டத்தில் சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.

ஈரோடு:

வடகிழக்கு பருவ மழை தமிழ் நாட்டில் தொடங்கி பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டதை பொறுத்த வரை பலத்த மழை பெய்யா விட்டாலும் மிதமான மழை பெய்து வருகிறது.

மாவட்டத்தில் நேற்றும் சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.எலந்தகுட்டை மேட்டில் மட்டும் அதிகபட்சமாக 21 மி.மீட்டர் மழை கொட்டியது.

மேலும் பெருந்துறை ஈரோடு, கவுந்தப்பாடி, சென்னிமலை பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் ரோடுகளில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நின்றது.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இன்று மழை வருவது போல் மேகமுட்டம் காணப்பட்டது.

பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் அணையின் நீர் மட்டம் 45 அடியாக குறைந்து விட்டது.

Similar News