செய்திகள்

வேதாரண்யம் அருகே மருமகளை தாக்கிய மாமனார் கைது

Published On 2016-11-01 15:12 IST   |   Update On 2016-11-01 15:12:00 IST
வேதாரண்யம் அருகே மருமகளை தாக்கியதாக வந்த புகாரின் பேரில் மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தில் வசிப்பவர் முகிலன். இவரது மனைவி தேவி (வயது 28). முகிலன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

தேவி தனது மகன் ரித்தீசுடன் தனியே வசித்து வருகிறார். இந்த நிலையில் மாமனார் முருகையன் தன்னை திட்டி, முடியை பிடித்து இழுத்து தாக்கியதாக தேவி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து முருகையனை போலீசார் கைது செய்தனர்.

Similar News