செய்திகள்
தொடரும் விபரீத விளையாட்டு: சிறுவனுக்கு மதுகொடுத்து படம் பிடித்த வாலிபர்கள் 3 பேர் கைது
சீர்காழி அருகே சிறுவனை மதுகுடிக்க வைத்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சீர்காழி:
குடிப்பழக்கம் பல குடும்பங்களை சீரழித்து வருகிறது. பள்ளி மாணவ-மாணவிகளும் மது குடிக்கும் பழக்கத்துக்கு உள்ளாகி வருவது சமீப காலமாக வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் சிறுவர்களை ஏமாற்றி மது குடிக்க வைத்து அதனை படம் பிடித்து வாட்ஸ்-அப்பில் வெளியிடும் விபரீத விளையாட்டு பரவி வருகிறது. இதை உறுதிபடுத்தும் விதமாக சீர்காழி அருகே சிறுவனை மதுகுடிக்க வைத்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள அகர திருக்கோலக்காவை சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்களான தினேஷ் (வயது 24), அரவிந்த் (21), மதுபாலா (19) ஆகிய 3 பேரும் தீபாவளி அன்று தனியாக அமர்ந்து மதுகுடித்துள்ளனர். அப்போது அவர்கள் அந்த வழியாக வந்த 9 வயது சிறுவனை அழைத்து குளிர்பானம் தருகிறோம். குடித்துவிட்டு போ என்று கூறி உள்ளனர்.
அதனை நம்பி சென்ற சிறுவனுக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்துள்ளனர். அதனை அவன் குடித்ததும் ஆட சொல்லி அதனை செல்போனில் படம் பிடித்துள்ளனர். மேலும் அதனை அவர்கள் வாட்ஸ்-அப்பில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்தநிலையில் தனது மகனை தேடி வந்த தாய் அவனை வாலிபர்கள் மதுகுடிக்க வைத்து படம்பிடிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தட்டிகேட்ட அவரை 3 வாலிபர்களும் மிரட்டி இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறியுள்ளனர்.
ஆனால் அவர் இதுபற்றி நேற்று சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனுக்கு மது கொடுத்து செல்போனில் படம் பிடித்த 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடிப்பழக்கம் பல குடும்பங்களை சீரழித்து வருகிறது. பள்ளி மாணவ-மாணவிகளும் மது குடிக்கும் பழக்கத்துக்கு உள்ளாகி வருவது சமீப காலமாக வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் சிறுவர்களை ஏமாற்றி மது குடிக்க வைத்து அதனை படம் பிடித்து வாட்ஸ்-அப்பில் வெளியிடும் விபரீத விளையாட்டு பரவி வருகிறது. இதை உறுதிபடுத்தும் விதமாக சீர்காழி அருகே சிறுவனை மதுகுடிக்க வைத்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள அகர திருக்கோலக்காவை சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்களான தினேஷ் (வயது 24), அரவிந்த் (21), மதுபாலா (19) ஆகிய 3 பேரும் தீபாவளி அன்று தனியாக அமர்ந்து மதுகுடித்துள்ளனர். அப்போது அவர்கள் அந்த வழியாக வந்த 9 வயது சிறுவனை அழைத்து குளிர்பானம் தருகிறோம். குடித்துவிட்டு போ என்று கூறி உள்ளனர்.
அதனை நம்பி சென்ற சிறுவனுக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்துள்ளனர். அதனை அவன் குடித்ததும் ஆட சொல்லி அதனை செல்போனில் படம் பிடித்துள்ளனர். மேலும் அதனை அவர்கள் வாட்ஸ்-அப்பில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்தநிலையில் தனது மகனை தேடி வந்த தாய் அவனை வாலிபர்கள் மதுகுடிக்க வைத்து படம்பிடிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தட்டிகேட்ட அவரை 3 வாலிபர்களும் மிரட்டி இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறியுள்ளனர்.
ஆனால் அவர் இதுபற்றி நேற்று சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனுக்கு மது கொடுத்து செல்போனில் படம் பிடித்த 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.