செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே சூதாடிய 4 பேர் கைது

Published On 2016-10-17 11:15 GMT   |   Update On 2016-10-17 11:15 GMT
கிருஷ்ணகிரி அருகே சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன் மற்றும் போலீசார் தேவசமுத்திரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியல் உள்ள மறைவான பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர்.

அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிட்டம்பட்டி பகுதியை சேர்ந்த சேகர்(37), சிவக்குமார்(32), லட்சுமணன்(35), சின்னசாமி(32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Similar News