செய்திகள்

ஆசனூர் ரோட்டில் நடமாடும் யானைகள்: வாகனங்களை நிறுத்தி செல்லில் படம் எடுக்கும் மக்கள்

Published On 2016-10-13 17:18 IST   |   Update On 2016-10-13 17:18:00 IST
ஆசனூர் ரோட்டில் நடமாடும் யானைகள் வாகன ஓட்டிகள் வண்டிகளை நிறுத்தி செல்போனில் படம் எடுக்கிறார்கள்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி ஆசனூர்-மைசூர் ரோட்டில் தற்போது யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக மாலை நேரத்தில் மேகமூட்டமாக இருக்கும் போது இந்த யானைகள் காட்டுக்குள் இருந்து வெளியேறி ரோட்டோரம் மேய்கிறது.

ஆசனூர் பகுதியில் இதேபோல் யானைகள் வெளியே நடமாடும்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்கள் மற்றும் கார், வேன்களில் வருபவர்களும் வண்டியை நிறுத்தி யானைகளை வேடிக்கை பார்க்கிறார்கள்.

மேலும் பலர் வண்டிகளை விட்டு கீழே இறங்கி தங்களது செல்போனில் யானையை படம் எடுக்கிறார்கள்.

“யானைகள் தற்போது ரோட்டோரம் மேய்வதை பொதுமக்கள் ஆர்வத்துடன் படம் எடுக்க வேண்டாம். அவை கும்கி யானைகள் அல்ல.. காட்டு யாகைள். எந்த நேரத்திலும் கோபத்துடன் ஆக்ரோசமாக நம்மை தாக்க வரும்” என்று வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

மேலும் மைசூர் ரோட்டில் செல்லும் வாகனங்கள் வேகமாக செல்ல வேண்டாம் வன விலங்குகள் ரோட்டை கடக்க கூடும். இதனால் அதன் மீது விபத்துகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறி உள்ளனர்.

Similar News