செய்திகள்
சென்னிமலை அருகே சரக்கு ஆட்டோ மீது கார் மோதி விபத்து: பள்ளி தலைமை ஆசிரியை பலி
சென்னிமலை அருகே நடந்த கார் விபத்தில் உப்பிலிபாளையம் பள்ளி தலைமை ஆசிரியை பலியான சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.
சென்னிமலை:
சென்னிமலை உப்பிலிபாளையம் இங்கு அரசு உதவி பெறும் கஸ்தூரிபாய் துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சிவகாமி (வயது 45), இவர் சிவியார்பாளையத்தினை சேர்ந்தவர் கணவர் பெயர் தெய்வசிகாமணி, தலைமை ஆசிரியை சிவகாமியும் அவரது மகன் சிவபிராசமும் நேற்று உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மாலை காரில் சென்னிமலை -பெருந்துறை ரோட்டில் 1010 நெசவாளர்காலனி பிரிவு அருகே ஊர் திருப்பி கொண்டு இருந்தனர்.
அப்போது ரோட்டில் நோ பார்க்கிங் ஏரியாவில் சிவப்பு விளக்கு இல்லாமல் சரக்கு ஆட்டோ ஒன்று நின்றுள்ளது. இந்த ஆட்டோ நின்றது தெரியாமல் கார் வந்த வேகத்தில் திடீர் என மோதியதில் அதில் டிரைவர் சீட் அருகே முன் பகுதியில் அமர்ந்திருந்த சிவகாமி படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தவர் மீட்டு ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் தலைமை ஆசிரியை சிவகாமி பரிதாபமாக இறந்தார். கார் ஓட்டி வந்த சிவபிராகாசமும் படுகாயம் அடைந்தார். அவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று காலை சிவாகாமியின் உடல் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், பரமேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படும் விதமாக ஆட்டோவினை நிறுத்திய டிரைவர் முருகனைதேடி வருகிறார். பள்ளி தலைமையாசிரியை விபத்தில் பலியான சம்பவம் சென்னிமலை பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.
சென்னிமலை உப்பிலிபாளையம் இங்கு அரசு உதவி பெறும் கஸ்தூரிபாய் துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சிவகாமி (வயது 45), இவர் சிவியார்பாளையத்தினை சேர்ந்தவர் கணவர் பெயர் தெய்வசிகாமணி, தலைமை ஆசிரியை சிவகாமியும் அவரது மகன் சிவபிராசமும் நேற்று உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மாலை காரில் சென்னிமலை -பெருந்துறை ரோட்டில் 1010 நெசவாளர்காலனி பிரிவு அருகே ஊர் திருப்பி கொண்டு இருந்தனர்.
அப்போது ரோட்டில் நோ பார்க்கிங் ஏரியாவில் சிவப்பு விளக்கு இல்லாமல் சரக்கு ஆட்டோ ஒன்று நின்றுள்ளது. இந்த ஆட்டோ நின்றது தெரியாமல் கார் வந்த வேகத்தில் திடீர் என மோதியதில் அதில் டிரைவர் சீட் அருகே முன் பகுதியில் அமர்ந்திருந்த சிவகாமி படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தவர் மீட்டு ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் தலைமை ஆசிரியை சிவகாமி பரிதாபமாக இறந்தார். கார் ஓட்டி வந்த சிவபிராகாசமும் படுகாயம் அடைந்தார். அவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று காலை சிவாகாமியின் உடல் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், பரமேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படும் விதமாக ஆட்டோவினை நிறுத்திய டிரைவர் முருகனைதேடி வருகிறார். பள்ளி தலைமையாசிரியை விபத்தில் பலியான சம்பவம் சென்னிமலை பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.