செய்திகள்

தலைஞாயிறு அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

Published On 2016-09-19 09:58 GMT   |   Update On 2016-09-19 09:58 GMT
தலைஞாயிறு அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைஞாயிறு:

தலைஞாயிறு அருகே அருதவம்புலம் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது60). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மேல கொருக்கையை சேர்ந்த பாலாஜி என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் துரைசாமி மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News