செய்திகள்

ஈரோடு அருகே தனியார் ஆஸ்பத்திரி நர்சு தற்கொலை

Published On 2016-09-19 13:29 IST   |   Update On 2016-09-19 13:29:00 IST
ஈரோடு அருகே தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:

சூரம்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி ஜெயமணி (வயது 45).

ஜெயமணி ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இவரது மகன் மணிகண்டன் (20). மணிகண்டன் எங்கும் வேலைக்கு போகமல் இருந்தாராம். இதனால் அவரது தாய் ஜெயமணி வேதனை அடைந்த நிலையில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த ஜெயமணி திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த பரிதாப சம்வம் பற்றி சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்த ஜெயமணி உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியியில் வைக்கப்பட்டுள்ளது.

Similar News