செய்திகள்

பொன்னமராவதியில் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்

Published On 2016-09-19 13:21 IST   |   Update On 2016-09-19 13:21:00 IST
பொன்னமராவதி பேரூந்து நிலையம் முன்பு சிட்டி லயன்ஸ் சங்கம் மற்றும் நத்தம் அப்போலோ மருந்தகம் இணைந்து நடத்திய இலவச சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடந்தது.
பொன்னமராவதி:

பொன்னமராவதி பேரூந்து நிலையம் முன்பு சிட்டி லயன்ஸ் சங்கம் மற்றும் நத்தம் அப்போலோ மருந்தகம் இணைந்து நடத்திய இலவச சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடந்தது.

முகாமிற்கு சிட்டியலயன்ஸ் சங்கத் தலைவர் டாக்டர் கருணாநிதி தலைமை வகித்தார். வட்டாரத்தலைவர் மாணிக்கவேல் முகாமை தொடங்கிவைத்தார். நத்தம் அப்போலோ மருந்தக மருத்து வக்குழுவினர் முகாமை நடத்தினர். இதில் செயலாளர்கள் செல்வம், சரவணன், பொருளாளர் செந்தில்குமார், துணைத்தலைவர் பாலமுரளி, இயக்குனர்கள் சந்திரன்,பாலசுப்பிரமணியன்,சுந்தரமூர்த்தி,ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News