செய்திகள்

நெல்லை அருகே பெண்ணை கேலி செய்தவர் கைது

Published On 2016-09-18 14:24 GMT   |   Update On 2016-09-18 14:24 GMT
நெல்லை அருகே ரோட்டில் நடந்து சென்ற பெண்ணை கேலி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:

நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் நேதாஜி நகரை சேர்ந்தவர் உடையார். இவரது மனைவி இசக்கியம்மாள்(வயது 24). சம்பவத்தன்று இவர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அவரை அதே பகுதியை சேர்ந்த கண்ணன்(40) என்பவர் கேலி செய்தாராம்.

இதை இசக்கியம்மாள் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன் இசக்கியம்மாளை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுபற்றி இசக்கியம்மாள் கங்கைகொண்டான் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவுசெய்து கண்ணனை கைது செய்தனர்.

Similar News