செய்திகள்

திருப்பத்தூரில் கள்ளக்காதலியை கத்தியால் குத்திவிட்டு வாலிபர் தற்கொலை முயற்சி

Published On 2016-09-15 16:30 IST   |   Update On 2016-09-15 16:30:00 IST
கள்ளக்காதலியை கத்தியால் குத்திவிட்டு வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே உள்ள சின்னகசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பரிமளா (வயது 33). திருமணமானபெண். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (25) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பரிமளா, சரண்ராஜியுடனான கள்ளத்தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரண்ராஜ், பரிமளாவை கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் சரண்ராஜ் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து கத்தி குத்தியதில் படுகாயம் அடைந்த பரிமளா மற்றும் வி‌ஷம் குடித்த சரண்ராஜ் ஆகியோர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News