செய்திகள்

திருப்பத்தூர் அருகே நடைபயிற்சிக்கு சென்றவர் வாகனம் மோதி பலி

Published On 2016-09-15 11:24 IST   |   Update On 2016-09-15 11:24:00 IST
திருப்பத்தூர் அருகே நடைபயிற்சி மேற் கொண்டிருந்தவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே நடைபயிற்சி மேற் கொண்டிருந்தவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்.

திருப்பத்தூர் அருகே தம்பிபட்டியைச் சேர்ந்தவர் ரெங்கசாமி மகன் சண்முகம்.(42), மீன் விற்கும் தொழில் செய்து வந்த இவர், தம்பிபட்டியில் உள்ள நான்குவழிச்சாலை ரோட்டில் அதிகாலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர் மீது மோதியதாக தெரிகிறது. இதில் சம்பவ இடத்திலேயே சண்முகம் இறந்தார்.

இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் நகர் காவல் துறையினர் இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

Similar News