செய்திகள்

சிவகங்கையில் ஆட்டோ டிரைவர்கள் மோதல்: 6 பேர் கைது

Published On 2016-09-14 14:00 IST   |   Update On 2016-09-14 14:00:00 IST
ஆட்டோ டிரைவர்கள் மோதலில் 2 பேர் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை:

சிவகங்கை நகர் தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது20), ஆட்டோ டிரைவர். இவர் வீட்டில் புறா வளர்த்து வந்தார்.

இது தொடர்பாக அதே தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அழகு (30) என்பவருக்கும் கருப்ப சாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விரோதம் தொடர்பாக சிவகங்கையில் உள்ள மதுரை முக்கு பகுதியில் கருப்பசாமியை அழகு, கார்த்திக் (24), ரவி (24), விக்ரமன் (23) மற்றொரு கார்த்திக் (29) ஆகியோர் கம்பு மற்றும் கற்களால் தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த கருப்பசாமி, சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் அழகு ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கருப்பசாமி மற்றும் போண்டா மணி ஆகியோர் தன்னை தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து அழகு, கருப்பசாமி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். போண்டா மணியை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News