செய்திகள்

கல்லல் அருகே கல்லூரிக்கு சென்ற நர்சிங் மாணவி மாயம்

Published On 2016-09-12 14:09 IST   |   Update On 2016-09-12 14:09:00 IST
கல்லல் அருகே கல்லூரிக்கு சென்ற நர்சிங் மாணவி திடீரென மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள புளியங்குடிபட்டியை சேர்ந்தவர் சிவகாமி (வயது46). இவரது மகள் கலைச்செல்வி (19). இவர் காரைக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி கல்லூரி செல்வதாக கூறி விட்டு சென்ற கலைச்செல்வி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்க வில்லை.

இதுகுறித்து சிவகாமி கல்லல் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப் பதிவு செய்து கலைச் செல்வியை தேடி வருகிறார்.

Similar News