செய்திகள்

திருமயம் அருகே செல்வ வினாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

Published On 2016-09-06 17:08 IST   |   Update On 2016-09-06 17:08:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள அம்மாப்பட்டியில் செல்வவினாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
திருமயம்:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள அம்மாப்பட்டியில் செல்வவினாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அம்மாப்பட்டியில் செல்வ வினாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா. நடைபெறுவதையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் கணபதி பூஜையுடன் யாக சாலை பூஜை தொடங்கின அதனை தொடர்ந்து திங்கள் கிழமை 05.09.16 காலை 7 மணியளவில் தொடங்கி யாக சாலை பூஜை 8.30வரை தொடர்ந்து நடைபெற்றன.

சரியாக காலை 9.40 மணியளவில் யாக சாலை பூஜையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர்குடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து சென்று கோபுரகலசத்தில் புனித நீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தீர்த்த வாரி தெளிக்கப்பட்ட பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்சியில் பி.கே.வைரமுத்து, வீட்டு வசதி வாரியத் தலைவர், ராதாகிருஷ்ணன் முன்னால் அமைச்சர், எஸ்,ரகுபதி எம்.எல்.எ, க.ராமசாமி தேமுதிக, மாவட்டசெயலாளர், செ.சுப்பிரமணியன். தேமுதிக. ஒ.செயலாளர், எல்.மாயாண்டி, ஊராட்சி மன்றதலைவர். சின்னையா, ஊ.ம.து.தலைவர் மற்றும் அம்மாப்பட்டி ஊரார்கள் பொதுமக்கள் களந்து கொண்டனர்.

Similar News