செய்திகள்

பொன்னமராவதி அருகே கபடி போட்டி

Published On 2016-09-05 16:20 IST   |   Update On 2016-09-05 16:21:00 IST
பொன்னமராவதி அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எஸ்வி. எல்லை 7ஸ்டார் கபடிக்குழு மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து நடத்திய கபடிப்போட்டி நடந்தது.

பொன்னமராவதி:

பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் எல்லைக் காட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எஸ்வி. எல்லை 7ஸ்டார் கபடிக்குழு மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து நடத்திய கபடிப்போட்டி நடந்தது. இந்தப் போட்டியை மிராஸ் மாரியப்பன் அம்பலம், ஊராட்சித்தலைவர் முருகே சன், உலகம்பட்டி கருப்பையா அம்பலம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 26 அணி வீரர்கள் பங்குபெற்று கபாடி விளையாடினர். இதில் முதல்பரிசை கட்டையாண்டிபட்டி அணியினரும், இரண்டாம் பரிசை தொட்டியம்பட்டி அணியினரும், 3-வது பரிசை மணல்மேட்டுப்பட்டி அணியினரும், 4-வது பரிசை கண்டியாநத்தம் எல்லைக்காடு எஸ்வி அணியினரும் பெற்றனர்.

வெற்றி பெற்ற அணியினருக்கு உடற்கல்வி ஆசிரியர் இன்பராஜ்பொன்னுத்துரை, வைரவன், முத்துராசு, எல்லை செவன்ஸ்டார் அணி, வத்துமலைராசு, பாண்டி, வேலுச்சாமி, கோடங்கி பழனிச்சாமி ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

Similar News