செய்திகள்
கோபி அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி
கோபி அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோபி:
கோபி அருகே உள்ள முருகன் புதூரை சேர்ந்தவரை சதாசிவம் (வயது 50). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வீட்டில் இருந்த சதாசிவம் சிறுநீர் கழிக்க வெளியே சென்றார்.
அப்போது அவரது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சதாசிவம் தவறி விழுந்து விட்டார். 25 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் தண்ணீரில் தத்தளித்த அவர் கூக்குரலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.கோபி தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்தனர். அதற்குள் சதாசிவம் தண்ணீ ரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சதாசிவத்துக்கு பரிமளா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.