செய்திகள்

பு.புளியம்பட்டியில் பிளக்ஸ் பேனர் வைப்பதில் மோதல்

Published On 2016-08-29 17:46 IST   |   Update On 2016-08-29 17:46:00 IST
பு.புளியம்பட்டியில் பிளக்ஸ் பேனர் வைப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டது.
பு.புளியம்பட்டி:

பு.புளியம்பட்டி பஸ்நிலையம் அருகே பொதுமக்கள் சார்பில் ஒரு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதை மறித்து முன்னால் இந்து முன்னணி சார்பில் ஒரு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையொட்டி நகராட்சி மற்றும் போலீஸ் தரப்பில் இரு பிளக்ஸ் பேனரையும் அவர்களே அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று கூறினர்.

இதை தொடர்ந்து பொது மக்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரை அவர்களே எடுத்து சென்றனர். ஆனால் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட பேனர் அகற்ற படாமல் இருந்தது.

அதே சமயம் இந்து முன்னணி சார்பில வைக்கப்பட்டிருந்த பேனர் அகற்றப்படவில்லை. இதனால் அந்த பேனரை அகற்ற பு.புளியம்பட்டி நகராட்சி ஊழியர்கள் அங்கு வந்தனர்.

அந்த பேனரை அகற்ற முயன்றபோது இந்து முன்னணி அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி காரசார கருத்து மோதல் நடந்தது. மேலும் இந்து முன்னணியினர் ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு சத்தி டி.எஸ்.பி. மோகன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு சமாதானம் ஏற்பட்டது. மறியலை கைவிட்டனர்.

Similar News