செய்திகள்

செங்கல்பட்டில் தி.மு.க கண்டன பொதுக்கூட்டம்

Published On 2016-08-26 15:05 IST   |   Update On 2016-08-26 15:05:00 IST
தமிழக சட்டசபையில் ஜனநாயகம் படும்பாட்டை கண்டித்து தி.மு.க கண்டன பொதுகூட்டம் நகர கழக செயலாளர் ச. நரேந்திரன் தலைமையில் செங்கல்பட்டு பழைய பஸ்நிலையம் அருகே நடைபெற்றது.
செங்கல்பட்டு:

தமிழக சட்டசபையில் ஜனநாயகம் படும்பாட்டை கண்டித்து தி.மு.க கண்டன பொதுகூட்டம் நகர கழக செயலாளர் ச. நரேந்திரன் தலைமையில் செங்கல்பட்டு பழைய பஸ்நிலையம் அருகே நடைபெற்றது.

நகர துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார்.

மாநில தீர்மான குழு செயலாளர் கோ.வி.செழியன் எம்.எல்.ஏ காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன் எம்.எல்.ஏ., வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் செங்கை தாமஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நகரமன்ற தலைவர் அன்புச் செல்வன், மாவட்ட பொறியாளர் அணி திருவள்ளுவன், மாவட்ட மகளிர் அணி சந்தியா, மீரா சபாபதி, கலாவதி மூர்த்தி, மற்றும் செங்கல்பட்டு நகரமன்ற உறுப்பினர்கள், கிளை கழக செயலாளர்பிரநிதிகள், இளைஞர் அணி, மாணவர் அணி, வழக்கறிஞர் அணி, தொண்டர் அணி, மகளிர் அணியினர், கலந்து கொண்டனர்.

Similar News