செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் சபாநாயகர் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம்: தி.மு.க. 24 பேர் கைது

Published On 2016-08-19 16:47 GMT   |   Update On 2016-08-19 16:47 GMT
சபாநாயகர் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க.வினர் 24 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்களை ஒரு வார காலத்திற்கு இடை நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் நேற்று முன்தினம் உத்திரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயங்கொண்டம் நகரச்செயலாளர் கருணாநிதி தலைமையில் தி.மு.க.வினர் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் சபாநாயகர் தனபாலின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கருணாநிதி, மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுபா.சந்திரசேகர், மாவட்ட துணை செயலாளர் கணேசன், வழக்கறிஞர்கள் கார்த்திக், மோகன்ராஜ், மாவட்ட பிரதிநிதி ராஜமாணிக்கம், பஞ்சநாதன் உள்பட 24 பேரை கைது செய்தனர்.

Similar News