செய்திகள்

சிவகங்கை மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நாளை நடக்கிறது

Published On 2016-08-11 16:04 IST   |   Update On 2016-08-11 16:04:00 IST
சிவகங்கை மாவட்டத்தில் நாளை கீழ்கண்ட இடங்களில் அம்மா திட்ட முகாம் நடக்கிறது.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம்கள் நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் நாளை கீழ்கண்ட இடங்களில் அம்மா திட்ட முகாம் நடக்கிறது.

காரைக்குடி வட்டத்தில் கற்பக விநாயகர்நகர், தேவகோட்டை வட்டத்தில் நல்லாங்குடி, திருப்பத்தூர் வட்டத்தில் அரிபுரம், சிவகங்கை வட்டத்தில் அழகிச்சிபட்டி இளையான்குடி வட்டத்தில் சபரியார்புரம், காளையார் கோவில் வட்டத்தில் கருதுப்பட்டி ஆகிய இடங்களில் அம்மா திட்ட முகாம் நடக்கிறது.

கிராம பொதுமக்கள் ஆவணங்களுடன் மனு செய்து தகுதி அடிப்படையில் உத்தரவு பெற்று பயன் அடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News