செய்திகள்

உதவித்தொகை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2016-08-06 16:34 IST   |   Update On 2016-08-06 16:34:00 IST
உதவித்தொகை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறையில் நாகை மாவட்ட தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மயிலாடுதுறை கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு உதவித்தொகை பெறுவதற்கு 40 சதவீகிதம் ஊனம் இருந்தால் உதவி தொகை வழங்கலாம் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதுநாள் வரை அரசு உதவி தொகை வழங்காமல் உள்ளதை கண்டித்து மாவட்ட செயலாளர் டி.கணேசன் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் சபா.அருள்மணி கோரிக்கை உரை நிகழ்த்தினார். விவசாய தொழிலாளர் மாவட்ட செயலாளர் ஜி.ஸ்டாலின், மாநில துணைத்தலைவர் வி.சிங்காரவேலன், தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் வி.பழனிவேல், மாநில துணைத்தலைவர் டி.ஜி.கலைச்செல்வி, மாவட்ட செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி டி.சாம்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உடனடியாக 40 சதவீகிதம் ஊனமுடையோருக்கு கடந்த 6 மாதமாக வழங்காமல் நிலுவையில் உள்ள அரசு உதவி தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News