செய்திகள்
உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற பாடுபட வேண்டும்: பா.ஜனதா கூட்டத்தில் தீர்மானம்
குன்நாண்டார் கோவிலில் ஒன்றிய பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் கீரனூரில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
கீரனூர்:
குன்நாண்டார் கோவிலில் ஒன்றிய பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் கீரனூரில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் பழசெல்வம், மாவட்ட தலைவர் ராமசேதுபதி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் ரெங்கசாமி, சிவசாமி, செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் குன்நாண்டார் கோவில் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பா.ஜ.க. கொடி ஏற்ற வேண்டும். கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். கீரனூர் ரெயில் நிலையத்தை விரிவு படுத்தி பல்லவன், சேது எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று பயணிகளை ஏற்றி, இற்க்கி செல்ல மத்திய ரெயில்துறை மந்திரிக்கு கோரிக்கை மனு அனுப்பவும் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற நிர்வாகிகள் பாடுபட வேண்டும. போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.