செய்திகள்
புதுக்கோட்டை அருகே செவ்வந்திப் பூக்கள் அமோக உற்பத்தி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் செட்டியாபட்டி, ராயப்பட்டி, வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் செவ்வந்திப் பூக்கள் அமோகமாக உற்பத்தியாவதால் விவசாயிகள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் செட்டியாபட்டி, ராயப்பட்டி, வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் செவ்வந்திப் பூக்கள் அமோகமாக உற்பத்தியாவதால் விவசாயிகள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வடகாடு, ஆலங்குடி, செட்டியாபட்டி, ராயப்பட்டி, மாங்காடு, கொத்தமங்கலம், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் செவ்வந்திப்பூ பயிர் செய்துள்ளனர்.
சமீபத்தில் பெய்த மழையால் பூக்கள் நல்ல உற்பத்தி அடைந்துள்ளது. மேலும் பூக்கள் உற்பத்தி செய்ய நல்ல திடமான விதைகளைத் தோட்டக்கலை துறையினர் விவசாயிகளுக்கு வழங்கினர். மேலும் பூச்சி மருந்து, தெளிப்பான் போன்ற அனைத்து பொருட்களையும், உபகரணங்களையும் வழங்கினர். பூக்கள் நல்ல விளைச்சல் கண்டுள்ளதாலும், நல்ல விலை கிடைப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தோட்டக்கலை துறையினருக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் செட்டியாபட்டி, ராயப்பட்டி, வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் செவ்வந்திப் பூக்கள் அமோகமாக உற்பத்தியாவதால் விவசாயிகள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வடகாடு, ஆலங்குடி, செட்டியாபட்டி, ராயப்பட்டி, மாங்காடு, கொத்தமங்கலம், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் செவ்வந்திப்பூ பயிர் செய்துள்ளனர்.
சமீபத்தில் பெய்த மழையால் பூக்கள் நல்ல உற்பத்தி அடைந்துள்ளது. மேலும் பூக்கள் உற்பத்தி செய்ய நல்ல திடமான விதைகளைத் தோட்டக்கலை துறையினர் விவசாயிகளுக்கு வழங்கினர். மேலும் பூச்சி மருந்து, தெளிப்பான் போன்ற அனைத்து பொருட்களையும், உபகரணங்களையும் வழங்கினர். பூக்கள் நல்ல விளைச்சல் கண்டுள்ளதாலும், நல்ல விலை கிடைப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தோட்டக்கலை துறையினருக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.