செய்திகள்
புதுச்சேரி மாநிலத்திற்கு தமிழக அரசு நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகிறது: நாராயணசாமி பேட்டி
தமிழக அரசு புதுச்சேரி அரசிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகிறது என்று புதுக்கோட்டையில் முதலமைச்சர் நாராயணசாமி பேசினார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று நடைபெற்ற குருப்பெயர்ச்சி விழாவில் புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி வளர்ச்சிக்காக பிரதமர், உள்துறை மந்திரி, நிதி மந்திரி ஆகியோரை சந்தித்து ரூ.7,675 கோடி நிதி வழங்கவேண்டும் என கேட்டுள்ளோம். அவர்களும் ஏற்றுக்கொண்டு நிதி மந்திரியின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளனர்.
சுற்றுலாவை வளர்ச்சி அடைய செய்யும் நோக்கில் சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக கன்னியாகுமரிக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை துறைமுகத்துடன் 10 லட்சம் டன் பொருட்களை கையாள்வதற்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த ஒப்பந்தம் ஒரு சில நாட்களில் கையெழுத்தாக உள்ளது.
இதில் மத்திய கப்பல் போக்குவரத்து இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார். அடுத்த ஆண்டு 40 லட்சம் டன் பொருட்களை கையாள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தோடு நல்ல நட்புறவு ஏற்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் கட்டுமான பணிகளுக்கு தமிழகத்தில் இருந்து தான் மணல் வரவேண்டும். புதுச்சேரி விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு தமிழக அரசின் ஒத்துழைப்பு வேண்டும். எனவே தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை விரைவில் சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளேன்.
தமிழக அரசு புதுச்சேரி அரசிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். தமிழக சட்டமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றி உள்ளது வரவேற்கத்தக்கது. இதற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
சசிகலா புஷ்பா எம்.பி.யின் விவகாரம் என்பது அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரம். சசிகலா புஷ்பாவிற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் எந்தவித ஆதரவும் அளிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று நடைபெற்ற குருப்பெயர்ச்சி விழாவில் புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி வளர்ச்சிக்காக பிரதமர், உள்துறை மந்திரி, நிதி மந்திரி ஆகியோரை சந்தித்து ரூ.7,675 கோடி நிதி வழங்கவேண்டும் என கேட்டுள்ளோம். அவர்களும் ஏற்றுக்கொண்டு நிதி மந்திரியின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளனர்.
சுற்றுலாவை வளர்ச்சி அடைய செய்யும் நோக்கில் சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக கன்னியாகுமரிக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை துறைமுகத்துடன் 10 லட்சம் டன் பொருட்களை கையாள்வதற்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த ஒப்பந்தம் ஒரு சில நாட்களில் கையெழுத்தாக உள்ளது.
இதில் மத்திய கப்பல் போக்குவரத்து இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார். அடுத்த ஆண்டு 40 லட்சம் டன் பொருட்களை கையாள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தோடு நல்ல நட்புறவு ஏற்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் கட்டுமான பணிகளுக்கு தமிழகத்தில் இருந்து தான் மணல் வரவேண்டும். புதுச்சேரி விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு தமிழக அரசின் ஒத்துழைப்பு வேண்டும். எனவே தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை விரைவில் சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளேன்.
தமிழக அரசு புதுச்சேரி அரசிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். தமிழக சட்டமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றி உள்ளது வரவேற்கத்தக்கது. இதற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
சசிகலா புஷ்பா எம்.பி.யின் விவகாரம் என்பது அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரம். சசிகலா புஷ்பாவிற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் எந்தவித ஆதரவும் அளிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.