செய்திகள்

புதுக்கோட்டையில் உலக தாய்ப்பால் வார விழா

Published On 2016-08-02 20:27 IST   |   Update On 2016-08-02 20:27:00 IST
புதுக்கோட்டையில் அரசு இராணியார் மருத்துவமனை வளாகத்தில் உலக தாய்ப்பால் வாரவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை:

உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு ஆலங்குடி சென்ட்ரல் ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் அரசு இராணியார் மருத்துவமனை வளாகத்தில் உலக தாய்ப்பால் வாரவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைவர் கி.தேசிங்குராசன் தலைமை தாங்கினார்.

ஆலங்குடி சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தலைவர் ஜெரால்டு ஞானப்பிரகாசம், அரசு இராணியார் மருத்துவமனை டாக்டர் இந்திராணி, டாக்டர் வீ.சி.சுபாஷ் காந்தி, டாக்டர் ரோட்டரி சங்கம் 3000ன் செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர் மாருதி.க.மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர்.

அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் தனி அலுவலர் பரிமளதேவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து பேசினார். பிறந்த சிசுவுக்கு அவசியம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று கூறி பிரசவித்த தாய்மார்களுக்கும் பிறந்த சிசுவுக்கும் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது. முகம்மது எசியா, சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்.

Similar News