செய்திகள்

கோட்டைப்பட்டினத்தில் நடுக்கடலில் மீனவர் திடீர் சாவு: போலீசார் விசாரணை

Published On 2016-08-02 16:45 IST   |   Update On 2016-08-02 16:45:00 IST
கோட்டைப்பட்டினத்தில் நடுக்கடலில் மீனவர் ஒருவர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 257 விசைப் படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க சென்றனர். இதில் தவமணி (வயது 55), செந்தில்வேல் (32), ஏழுமலை (32), விஜயகுமார் (52) ஆகிய 4 பேர் ஒரு விசைப்படகில் 20 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென தவமணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அழைத்துக்கொண்டு படகில் கரை திரும்பினர். இருப்பினும் வரும் வழியில் தவமணி இறந்தார். இது குறித்து மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News