செய்திகள்

ஜாதி சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலகத்தில் போதையில் ஒருவர் ரகளை

Published On 2016-07-27 20:05 IST   |   Update On 2016-07-27 20:05:00 IST
மயிலாடுதுறை தாலுகா அலுவலகத்தில் போதையில் ஒருவர் ரகளை செய்தார்.

மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா அலுவலகத்திற்கு நேற்று ஒருவர் குடி போதையில் வந்தார். அவர் எனது மகனுக்கு ஜாதி சான்றிதழ் வேண்டும் என கேட்டார்.

அவரது மகன் பெயரை கேட்டதற்கு பதில் கூறாமல் வருவாய் அலுவலர் அறைக்கு சென்றார். நான் சிங்கப்பூரில் இருந்து வருகிறேன். எனது மகனுக்கு சான்றிதழ் வேண்டும் என மீண்டும் கூறினார்.

இதற்கு யாரும் பதில் சொல்லவில்லை. இதனை தொடர்ந்து கம்ப்யூட்டர் மையத்திற்கு சென்றார். அங்கும் சரியாக பதில் அளிக்கவில்லை. ஒரு சிலர் அவரை வெளியே செல்லுமாறு கூறினர்.

அதற்கு அவர் நான் ஜாதி சான்றிதழ் வாங்காமல் செல்ல மாட்டேன். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்றார். சுமார் 30 நிமிடம் தாலுகா அலுவலகத்தை சுற்றி வந்தார்.

பின்னர் தான் வைத்திருந்த மஞ்சள் பையை காணவில்லை என கூறியவாறே நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். நகராட்சி கட்டிடம் முன்பாக காந்தி சிலை வைக்கப்பட்டுள்ள கதவை பிடித்து கொண்டு மகனுக்கு ஜாதி சான்றிதழ் கொடுக்க மறுக்கிறார்கள் என அழுது புலம்பினார். நீண்ட நேரமாக அங்கு நின்றவர் மயங்கி விழுந்தார்.

இதனால் பரபரப்பு நிலவியது.

Similar News