செய்திகள்

வேதாரண்யம் அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு: போலீசார் விசாரணை

Published On 2016-07-09 14:52 IST   |   Update On 2016-07-09 14:52:00 IST
வேதாரண்யம் அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த குரவப்புலம் தெற்குகாடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமன். இவரது மகள் கார்த்திகா (17). இவர் வேதாரண்யத்தில் அரசு கல்லூரியில் பி.ஏ இரண்டாமாண்டு படித்து வந்தார்.

கடந்த 6-ம் தேதி வீட்டில் இருந்த போது இவரது தாய் தங்கம் நூறு நாள் வேலைக்கு சென்று விட்டு திரும்பிய நிலையில் வீட்டிலிருந்த கார்த்திகாவிடம் சமைக்க கூடாதா என கேட்டுள்ளார். பின்பு தாய், மகள் அனைவரும் சமைத்து சாப்பிட்டு முடித்த பின்னர் கார்த்திகா மட்டும் அருகிலிருந்த கொட்டகைக்கு சென்று மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

படுகாயமடைந்த அவரை வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின் தீவிர சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து விட்டார்.

புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Similar News