செய்திகள்

சீர்காழி அருகே மாணவியிடம் பாலியல் பலாத்காரம் வாலிபர் கைது

Published On 2016-07-07 16:56 IST   |   Update On 2016-07-07 16:56:00 IST
சீர்காழி அருகே மாணவியை பாலியல் பலாத்கராம செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழி அருகே சேத்தூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியில் செயல்படும் ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் 10–ம் வகுப்பில் படித்து வருகிறார். அவரிடம் மன்னிபள்ளம், உடையூரை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் விமல்ராஜ் (20) ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியியல் பலாத்காரம் செய்துள்ளார்

இதுபற்றி அறிந்த மாணவியின் தாய் சீர்காழி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அழகுதுரை வழக்குப்பதிவு செய்து விமல்ராஜை கைது செய்தார். விமல்ராஜ் கூலி தொழிலாளி ஆவார்.

மாணவியை வாலிபர் பலாத்காரம் செய்த சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News