செய்திகள்

சீர்காழியில் குடிநீர் விழிப்புணர்வு பேரணி: பாரதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2016-06-30 17:55 IST   |   Update On 2016-06-30 17:55:00 IST
சீர்காழியில் குடிநீர் விழிப்புணர்வு பேரணியை பாரதி எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சீர்காழி:

சீர்காழியில் அரசு மருத்துவமனை எதிரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குடிநீர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு குடிநீர் வடிகால் துறை சீர்காழி திட்ட உபகோட்ட உதவி பொறியாளர் சுபத்ரா தலைமை தாங்கினார்.

மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சந்திரசேகரன், துணைத்தலைவர் ஜெயராமன், சீர்காழி நகர கூட்டுறவு வங்கி தலைவர் பக்கிரிசாமி, துணைத்தலைவர் மணி, வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி மன்ற இளம்நிலை உதவியாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி நிர்வாக பொறியாளர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார்.

பேரணியை பாரதி எம்.எல்.ஏ கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் கட்சி நிர்வாகிகள் வேணுகோபால், செல்வம், ரிமில்டாதுரைராஜ், பேரூராட்சி எழுத்தர் நடராஜன், தியாகராஜன், பரகத்அலி மற்றும் கலந்து கொண்டனர். பேரணி பழைய பேருந்து நிலையம், கடைவீதி, வழியாக அரசு மருத்துவமனை சாலையை வந்தடைந்தது. பேரணியின்போது மாணவர்கள் குடிநீர் சம்மந்தப்பட்ட வாசகங்கள் அட்டையினை கைகளில் ஏந்தி சென்றனர்.

Similar News