செய்திகள்

வேதாரண்யம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Published On 2016-06-30 16:44 IST   |   Update On 2016-06-30 16:44:00 IST
வேதாரண்யம் அருகே தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை ஆறுமுகச்சந்தி பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது பெரியகுத்தகை பகுதியைச் சேர்ந்த காளியப்பன் (56) என்பவரை பிடித்து விசாரித்த போது அவரிடம் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் இருந்தது.

அதனை போலீசார் கைப்பற்றி லாட்டரி சீட்டு விற்பனை செய்த காளியப்பனை கைது செய்து கோர்டில் ஆஜர்படுத்தினர்.

Similar News