செய்திகள்
அரியலூர் அருகே இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை
அரியலூர் அருகே இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் அருகே தேளூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன். இவர், சிங்கப்பூரில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 24). இவர்களுக்கு 1 பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமியின் மாமனார் நடராஜன் உள்ளிட்ட குடும்பத்தினர் உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியில் சென்றிருந்தனர். அப்போது விஜயலட்சுமி தனது குழந்தையுடன் வீட்டில் இருந்தார்.
இந்த நிலையில் நடராஜன் தனது குடும்பத்தினருடன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்த போது விஜயலட்சுமியின் குழந்தை மட்டும் வீட்டிலிருந்தது. இதனால் அதிர்ந்து போன நடராஜன் வீடு முழுவதும் தேடி பார்த்த போது தான் விஜயலட்சுமி மாயமானது தெரிய வந்தது.
இதையடுத்து நடராஜன் மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் விஜயலட்சுமி கிடைக்கவில்லை. இது குறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் நடராஜன் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கன்னியம்மாள் வழக்குப்பதிவு செய்து, குடும்ப பிரச்சினை காரணமாக கோபித்து கொண்டு விஜயலட்சுமி சென்றாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.
அரியலூர் அருகே தேளூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன். இவர், சிங்கப்பூரில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 24). இவர்களுக்கு 1 பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமியின் மாமனார் நடராஜன் உள்ளிட்ட குடும்பத்தினர் உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியில் சென்றிருந்தனர். அப்போது விஜயலட்சுமி தனது குழந்தையுடன் வீட்டில் இருந்தார்.
இந்த நிலையில் நடராஜன் தனது குடும்பத்தினருடன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்த போது விஜயலட்சுமியின் குழந்தை மட்டும் வீட்டிலிருந்தது. இதனால் அதிர்ந்து போன நடராஜன் வீடு முழுவதும் தேடி பார்த்த போது தான் விஜயலட்சுமி மாயமானது தெரிய வந்தது.
இதையடுத்து நடராஜன் மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் விஜயலட்சுமி கிடைக்கவில்லை. இது குறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் நடராஜன் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கன்னியம்மாள் வழக்குப்பதிவு செய்து, குடும்ப பிரச்சினை காரணமாக கோபித்து கொண்டு விஜயலட்சுமி சென்றாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.